விடுதலையை கேட்டால் வீடுகட்டித் தருகிறேன் எனக் கூறும் நாமல்!

breaking
  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினரான தமிழ் அரசியல் கைதி ஒருவரின் குடும்பத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வீடொன்றை அமைத்துக் கொடுக்க முன்வந்துள்ளார். அண்மையில் வடக்கில் ஏற்பட்டிருந்த வெள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்காக நேற்றையதினம் வடக்குக்கு சென்ற நாமல் கிளிநொச்சியிலுள்ள குறித்த கைதியின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது தமிழின அழிப்பை செய்தவர்களில் முதன்மையானவர்களாகவுள்ளது ராஜபக்ச குடும்பமே அவர்களது காலத்திலேயே அதிகளவான இளைஞர்கள் பயங்கரவாத சட்டத்தினூடக கைது செய்யப்பட்டு விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வங்குரோத்து அரசியல் செய்யும் நோக்குடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரின் குடும்பமொன்றுக்கு வீடு கட்டித் தருவதாக நாமல் தம்பட்டம் அடிக்கிறார் வீடு கட்டிக்குடுப்பதை விட்டு தடுத்து வைத்திருப்பவரை விடுதலை செய்தாலே அந்தக் குடும்பம் மகிழ்ச்சியாக வாழும்.