இயற்கை விவசாய வாரத்தின் இறுதி நிகழ்வு புதுக்குடியிருப்பில்!

breaking
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்தும் நோக்கில் வடக்கில் சகல மாவட்டங்கிலும் இயற்கைவழி அர்வலர்களின் பங்கெடுப்புடன் கடந்த 08.01.19 மன்னாரில் தொடக்கிவைக்கப்பட்டதன் இறுதி நிகழ்வு 14.01.19 அன்று புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள செல்வபாக்கியம் பண்ணையில் நடைபெற்றுள்ளது.  மருத்துவர் பிரபு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் செல்வபாக்கியம் பண்ணையின் உரிமையாளரும் நடனம்மா இயற்கை வழி உள்ளீடுகள் உற்பத்தியின் உரிமையாளருமான நேசன் அவர்கள் தனது இயற்கை வேளான் மாடுவளர்ப்பு தொடர்பில் உரை நிகழ்த்தினார் இதில் விவசாய போதனாசிரியர்கள்,பிரதேச செயலக அதிகாரிகள்மற்றும் இயற்கை இயகத்தினை சேர்ந்த உறுப்பினர்கள் விவசாயிகள் என பலர் கலந்துகொண்டு பலன் பெற்றுள்ளார்கள் இனிவரும் காலங்களில் இயற்கைவழி உள்ளீடுகளை பயன்படுத்தி எவ்வாறு உற்பத்திகளை மேற்கொள்ளவேண்டும் என்பது தொடர்பிலும், அதனால் உடல் நலனுக்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.உகநாதன் எடுத்துரைத்துள்ளார்.