நல்லிணக்கத்திற்கு வந்தவர்களால் ஏற்பட்ட குந்தகம்-முல்லைத்தீவில்!

breaking
இலங்கையினை பாதுகாப்போம் என்ற அமைப்பினால் தெற்கில் சேகரிக்கப்பட்ட பொங்கல் பொருட்கள் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்விற்காக தெற்கில் இருந்து வந்த இலங்கையினை பாதுகாப்போம் என்ற அமைப்பினை சேர்ந்த பௌத்த துறவிகள் மற்றும் சிங்களவர்கள் ஆகியோர் முல்லைத்தீவில் நாயாற்று பகுதியில் உள்ள பௌத்த தேவாலயத்தில் தங்கி நின்று அங்கு இனங்களுக்கிடையில் முறுகல் நிலையினை ஏற்படுத்திவிட்டு அதாவது நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பொங்ல் பொங்க சென்ற பிரதேச மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்திவிட்டு புதுக்குடியிருப்பில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் 100 பேருக்கு பொங்கல் பொருட்களை வழங்கியுள்ளார்கள். சிங்கள பௌத்தத்தின் ஆதிக்கம் தமிழர்கள் மீது திணிக்கப்படுவதன் செயற்பாடாகவே இது அமைந்துள்ளது .