பிரதேச செயலக உத்தியோகத்தர் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது !

breaking
கிளிநொச்சி பூனகரிப்பகுதியில்  பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு பிரதேச செயலகத்தினால் வழங்கிய உதவிக்கு இலஞ்சம் பெற்ற பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பூனகரிப்பகுதியில் இலஞ்சம் பெறுவதாக  இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அங்கு சென்ற அதிகாரிகள் இன்று (14-01-2019) பாதிக்கப்ட்ட குடும்பம் ஒன்றுக்கு வாழ்வாதார உதவி வழங்குதற்கு இலஞ்சம் தருமாறு பொருளாதார உத்தியோகத்தர் கேட்டதற்கு இனங்க பணம் வழங்கப்பட்ட போது குறித்த அரச உத்தியோகத்தரை கைது செய்துள்ளனர்
இது தொடர்பில் பிரதேச செயலர் கிருஸ்னேந்திரன்  அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்ட போது
மேற்படி சம்பவம் உண்மையென்றும் குறித்த குற்றச் சாட்டுத் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கையினை அனுப்பி வைப்பதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.