ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வை வழங்க முடியும்!

breaking
ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வை வழங்க முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். யக்கலமுல்ல – கராகொட பூர்வாராம விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மதகுருமாருக்கான விடுதியை திறந்து வைக்கும் நிகழ்விலேயே பிரதமர் இக்கருத்தை வௌியிட்டார். இந்நிகழ்வு இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் தெரிவித்ததாவது,அரசியலமைப்பு வந்தால் நாடு பிளவுபடும் என சிலர் கூறுகின்றனர். நாங்கள் எந்த ஒரு அரசியலமைப்பினையும் தயாரிக்கவில்லை. அரசியலமைப்பு வரைபையே தயாரித்துள்ளோம். ஜே.ஆர்.ஜயவர்தன ஒற்றையாட்சியை மாற்றுவதில்லை என கூறினார். நானும் ஒற்றையாட்சி என்றே கூறுகின்றேன். ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டு செல்ல எம்மால் முடியும் என கூறுகின்றேன்.