பாவனையற்ற வீட்டிற்குள் வைத்து கள்ளச்சாரயம் வடிப்பு.!

breaking
வட தமிழீழம் ,முல்லைத்தீவு சுதந்திரபுரம் கொலணி பகுதியில் பாவனைக்கு இல்லாத வீடு ஒன்றில் கள்ளச்சாராயம் வடிப்பதாக புதுக்குடியிருப்பு சிங்கள இனவாத காவல்துறையினருக்கு  தகவல் கிடைத்துள்ளது 
 
இதற்கமைய 26.01.19 அன்று சிங்களஇனவாத  காவல்நிலைய பொறுப்பதிகாரி எம்.ஏ.சந்திரபால தலைமையிலான குழுவினர் குறித்த பகுதிக்கு சென்று சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்கள். இதன்போது கசிப்பு காச்சும் நடவடிக்கையில் ஈடுபட்டமூவரை  கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்த கசிப்பு காச்சுவதற்காக பயப்படுத்தப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட 05 பெரல் கோடா, 20 லீற்றர் கசிப்பு என்பன பொலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.
 
சுதந்திரபுரம் கொலனி பகுதியில் மக்களின் பாவனையற்ற வீடுகளை பயன்படுத்தி சட்டவிரோ செயல்கள் அதிகரித்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
 
இன்னிலையிலேயேஇவ்வாறான பாவனையற்ற வீட்டினை பயன்படுத்தி சட்டவிரோ கசிப்பு காச்சும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூவரையும் கைதுசெய்து சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தியுள்ளதாக சிங்கள இனவாத காவல்துறையினர்  தெரிவித்துள்ளார்கள்.