26.01.19 அன்று ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட முத்துஜயன்கட்டு காட்டுப்பகுதியில் விறகு வெட்ட சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகி ஒட்டுசுட்டான் மருத்துவ மனை கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை மாவட்ட மருத்துவமனை எடுத்துசெல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்துஜயன் கட்டுப்பகுதியினை சேர்ந்த 55 அகவையுடைய பொன்னம்பலம் நடராசா என்பவரே இவ்வாறு சிறுத்தை கடிக்கு இலக்காகியுள்ளார்