ஏறாவூரில் விபத்து விரிவுரையாளர் மரணம்

breaking
  தென்தமிழீழம், மட்டக்களப்பு ஏறாவூரில் இடம்பெற்ற விபத்தில் விரிவுரையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதிக்கொண்டதனாலேயே இன்று(வியாழக்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது சந்தை வீதி, செங்கலடியைச் சேர்ந்த கந்தக்குட்டி கோமளேஸ்வரன் (வயது 48) என்ற மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையின் இரசாயனவியல் விரிவுரையாளரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த விரிவுரையாளரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.