மாநகர சபையை ஏமாற்றி நடாத்தப்பட்ட வர்த்தக கண்காட்சி: விசாரனைக்கு ஆனோல்ட் பணிப்பு

breaking
  வடதமிழீழம், யாழ்ப்பாணம் வர்த்தக கண்காட்சியில் 167 காட்சிக் கூடங்களுக்கு மாநகர சபையில் அனுமதி பெறப்பட்ட போதும், 269 காட்சிக் கூடங்கள் நடத்தப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அது தொடர்புல் விசாரணை மேற்கொள்ளுமாறு யாழ்.மாநகர முதல்வர் பணித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபைக்குச் சொந்தமான நிலப்பரப்பில் 25, 26, 27 ஆகிய 3 தினங்களும் இடம்பெற்ற வர்த்தக கண்காட்சி தொடர்பில் இடம்பெற்ற மேற்படி சம்பவத்தினால், சபைக்கு வர வேண்டிய வருமானம் இழக்கப்பட்டுள்ளது. இதற்ககுக் காரணமாக இருந்த விடயங்கள் தொடர்பிலும் அதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயும் வகையில் ஓர் விசாரணையை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார். அதேவேளை குறித்த கண்காட்சியின் போது பார்வையாளர் பற்றுச் சீட்டுக்கள் 100 புத்தகங்கள் மட்டுமே அனுமதி பெறப்பட்ட நிலையில், மேலும் 25 புத்தகங்கள் எந்தவிதமான அனுமதியும் இன்றி அச்சிட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பிலும் சபை உத்தியோகத்தர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பிலும் இணைந்த விசாரணையை மேற்கோள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.