முல்லையில் செஞ்சிலுவை தொண்டர்கள் மதிப்பளிப்பு!

breaking
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இலங்கை செங்சிலுவை சங்கத்தின் கிழையில் மக்கள் சேவைகளை வழங்கிவந்த தொண்டர்கள்  மதிப்பளிப்பு நிகழ்வு 02.02.19 அன்று முல்லைத்தீவு மாவட்ட செஞ்சிலுவை சங்க கிளை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
செஞ்சிலுவை சங்கத்தின் முதலுதவி போதனஆசிரியர் தே.சிறீகமலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வித்தியானந்தாக கல்லூரி பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நடத்தினை தொடர்ந்து நிகழ்வு சுடர் ஏற்றப்பட்டு கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செஞ்சிலுவை சங்க தவைர் சு.மரியநாயகம்,மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எஸ்.கோகுலராஜா,முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்து நிலைய அதிகாரி பெ.சுந்தர்,முன்னாள் மாவட்ட செஞ்சிலுவை சங்க தலைவர் ச.திருச்செல்வம், முல்லைத்தீவு மாவட்ட கிளை நிறைவேற்று அதிகாரி  க.நிதர்சன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு தொண்டர்களின் சேவை மனிதாபிமான சேவைகளை மதிப்பளித்து கொளரவிக்கப்பட்டுள்ளார்கள்