பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் உயிரோடு இருப்பது ஜெயலலிதா போட்ட பிச்சையாம் செல்லூர் ராஜூ .?

breaking
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட  எழுவர்  இன்று உயிரோடு வாழ்கிறார்கள் என்றால், அது ஜெயலலிதா போட்ட பிச்சை என  செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.  மதுரை டி.வி.எஸ். நகரில் நகராட்சி பூங்காவை திறந்து வைத்த செல்லூர் ராஜு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றிய அரசு, அதிமுக அரசு எனக் கூறிய செல்லூர் ராஜூ, 7 பேரும் வாழ்ந்துகொண்டிருப்பது ஜெயலலிதா போட்ட பிச்சை என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பேரறிவாளன் உட்பட 7 பேர் பற்றிய அமைச்சர் செல்லூர் ராஜு கருத்துக்கு   தமிழின உணர்வாளர் வ.கொளதமன் கண்டனம் தெரிவித்துள்ளார்