இலங்கைக்கு சுதந்திர தினமாம்!

breaking
சங்கத்து தமிழன் வாழ்வை பங்கத்தில் பங்கு கொண்டு வங்கத்தில் அழித்தமைக்காய் சிங்கத்து சுதந்திரமாம்.... ஊருக்குள் வந்து எங்கள் உதிரம் குடித்த பின்னர் சேருங்கள் என்றவுடன் சேர்வதும் எப்படியோ .. போரிலே மோகம் கொண்டு பூக்களை அழித்துக் கொன்ற தாக்கங்கள் தெரிந்த பின்னும் ஏக்கத்தை மறந்து இன்று எப்படிச் சேருவதோ.. பெண்டிர் நிதம் கவர்ந்து பேதை பிணம் புணர்ந்த குண்டர் அதை மறந்து எப்படிக் குதூகலிக்க.... வெஞ்சினம் கொண்ட எங்கள் வேங்கைகள் சிறையில் வாட வஞ்சினம் மறந்து விட்டு வசந்தமாய் வாழுவதோ . சொந்தங்கள் அழித்த உங்கள் சிந்தனை ஓயும் மட்டும் பந்தங்கள் தேவை இல்லை பாசத்து வேஷம் போதும் .. ...கவிப்புயல் சரண்.....