ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த ஜனவரி 12ம் திகதி மீன் பிடிக்க சென்ற 8 பேரை, சிங்கள இனவாத கடற்படையினர் சிறை பிடித்தனர். இவர்கள் வட தமிழீழம் யாழ்ப்பாணத்தில் சிங்கள அரசால் சுவிகரித்துள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணை கைதியாக இருந்து வரும் பள்ளி மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உட்பட 8 மீனவர்களையும், நேற்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் சிங்கள அடக்குமுறை காவல்துறையினர் நிறுத்தினர் விசாரணை அடுத்து நீதிபதி ஜூட்சன், 8 பேரையும் வரும் 20ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.