சிங்கள சிறையில் உள்ள 2 மாணவர்கள், 6 மீனவர்களின் காவல் நீட்டிப்பு.!

breaking
ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த ஜனவரி  12ம்  திகதி  மீன் பிடிக்க சென்ற 8 பேரை,  சிங்கள இனவாத  கடற்படையினர் சிறை பிடித்தனர். இவர்கள்  வட தமிழீழம் யாழ்ப்பாணத்தில்  சிங்கள அரசால் சுவிகரித்துள்ள  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணை கைதியாக இருந்து வரும் பள்ளி மற்றும் பொறியியல்  கல்லூரி மாணவர்கள் 2 பேர் உட்பட 8 மீனவர்களையும், நேற்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் சிங்கள அடக்குமுறை  காவல்துறையினர்  நிறுத்தினர்   விசாரணை அடுத்து  நீதிபதி ஜூட்சன், 8 பேரையும் வரும் 20ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.