திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மேற்கொள்வதற்கு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை கண்டித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் திருக்காரவாசலில் கடந்த 27ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும் 11வது நாளாக இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசை கண்டித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரியும் விவசாயிகள் வாயில் கருப்பு துணியை கட்டியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.