துயிலுமில்லத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்குகளை திருடிச் சென்ற விசமிகள்

breaking
  வடதமிழீழம்: கிளிநொச்சி கன­க­பு­ரம் மாவீ­ரர் துயி­லும் இல்­லத்­தில் பொருத்­தப்­பட்­டி­ருந்த மின்­வி­ளக்­கு­க­ளைச் சேதப்­ப­டுத்தி அதி­லுள்ள மின்­க­லங்­களை விச­மி­கள் திரு­டிச் சென்­றுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. கிளி­நொச்சி மாவட்­டத்­தி­லுள்ள கன­க­பு­ரம் மாவீ­ரர் துயி­லும் இல்­லத்­தில் அதி­க­ள­வான மாவீ­ரர்­க­ளது வித்­து­டல்­கள் விதைக்­கப்­பட்­டுள்­ளன. மாவீ­ரர் துயி­லும் இல்­லம் தமிழ் மக்­க­ளால் புனி­த­மான இட­மாக நோக்­கப்­பட்டு வணக்­கம் செலுத்­தப்­பட்டு வரு­கின்­றது. தற்­போது கன­க­பு­ரம் மாவீ­ரர் துயி­லும் இல்­லத்­தில் மாவீ­ரர்­க­ளின் உற­வு­க­ளால் பொருத்­தப்­பட்­டி­ருந்த சூரிய மின்­க­லத்­து­டன் கூடிய மின்­வி­ளக்­கு­களே விச­மி­க­ளால் சேத­மாக்­கப்­பட்டு அதி­லுள்ள மின்­க­லங்­கள் திரு­டப்­பட்­டுள்­ளன.