துயிலுமில்லத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்குகளை திருடிச் சென்ற விசமிகள்
வடதமிழீழம்: கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகளைச் சேதப்படுத்தி அதிலுள்ள மின்கலங்களை விசமிகள் திருடிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அதிகளவான மாவீரர்களது வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளன. மாவீரர் துயிலும் இல்லம் தமிழ் மக்களால் புனிதமான இடமாக நோக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது.
தற்போது கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவுகளால் பொருத்தப்பட்டிருந்த சூரிய மின்கலத்துடன் கூடிய மின்விளக்குகளே விசமிகளால் சேதமாக்கப்பட்டு அதிலுள்ள மின்கலங்கள் திருடப்பட்டுள்ளன.