வெளிநாட்டு சிகரெட் வைத்திருந்த உணவக உரிமையாளர் கைது!

breaking
  வெளிநாட்டு சிகரெட் பக்கற்றுக்களை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் உணவக உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் அவர் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டார். யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள உணவகம் ஒன்றுக்குள் திடீர் தேடுதலை முன்னெடுத்த யாழ்ப்பாணம் சிறப்பு காவல்துறைப் பிரிவினர், அங்கிருந்து வெளிநாட்டு சிகரெட் பக்கற்றுக்கள் ஐந்தை மீட்டுள்ளதுடன் உணவக உரிமையாளரைக் கைது செய்து யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் ஒப்படைத்ததுடன் கைப்பற்றப்பட்ட சிகரெட் பக்கற்றுக்களையும் கையளித்திருந்தனர். உணவக உரிமையாளர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.