கூரையைப் பிரித்து வீடுபுகுந்து திருடர் சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் மாகியப்பிட்டிப் பகுதியிலுள்ள வீட்டில் நேற்றுமுன்தினம் முற்பகல் இடம்பெற்றது.
கணவன் மனைவி இருவரும் பணிநிமித்தம் வெளியே சென்று பிற்பகல் 2 மணியளவில் வீடு திரும்பியபோது திருட்டு இடம்பெற்றுள்ளதைக் கண்டனர். இது குறித்து மானிப்பாய்ப் காவல் நிலையத்தில் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.