காணாமால் ஆக்கப்பட்டோரது போராட்டத்திற்கு உலகத் தமிழர் மாணவர் ஒன்றியம் ஆதரவு 

breaking
    காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு உலகத்தமிழர் மாணவர் ஒன்றியம் ஆதரவு தெரிவித்துள்ளது.   காணாமலாக்கப்பட்டோருக்கான அறவழிப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 2ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு, காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.   எதிர்வரும் 25ஆம் திகதி கிளிநொச்சியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், குறித்த போராட்டத்தில் தமது அமைப்பினரும் பங்கேற்கவுள்ளதாக உலத்தமிழ் மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் கந்தசாமி ராகுலன் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.   அத்தோடு குறித்த தினத்தில் ஆரம்பமாகவுள்ள ஐக்கியநாடுகள் சபையின் 40ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இந்த விடயம் தொடர்பாக முடிவெடுக்கவேண்டிய கடமை ஐக்கியநாடுகள் சபைக்கு உள்ளதென்றும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.