10.03.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் காவியமான கடலோடிகள் நினைவு சுமந்த காணொளி .

breaking

10.03.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் காவியமான கடலோடிகள் நினைவு சுமந்த காணொளி 

விடுதலைப்புலிகளின் எம்.ரி.கொய் வணிகக்கப்பலில் காவியமானவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

10.03.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் எம்.ரி.கொய் வணிகக்கப்பலை வழிமறித்து சிறிலங்கா கடற்படையினர் தாக்கிய போது வீரச்சாவைத் தழுவிய கடற்கரும்புலி ‘கப்பல் கப்டன்’ லெப்.கேணல் சிலம்பரசன், உட்பட 11 போராளிகளின் 18 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.




எமது விடுதலைப் போராட்டத்திற்கு அடி நாதமாகவும், ஆணிவேராகவும் இருக்கும் மூலாதாரங்களை கொண்டுவந்து சேர்க்கவும். அடக்கு முறையாளர்களின் தடைகளால் அல்லலுறும் எம் மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை கொண்டுவந்து கரை சேர்க்கவும் என கடற்புலிகளின் கப்பல்கள் வையப்பரப்பிலுள்ள கடலெல்லாம் சென்று வந்தன.

“வெளியே தெரிந்ததுமாய் உள்ளே மட்டும் அறிந்ததுமாய்” அளப்பெரிய பணிகளை இந்தக் கடலோடிகள் செய்து முடித்தனர்.

உயிரைக் கூட துச்சமாக மதித்து சர்வதேசக் கடற்பரப்பின் விரிப்பில் ஒர்மமுள்ள எம் கடலோடிகளின் வீரம் செறிந்த சாதனைகள் முலமே எம் விடுதலைப் போராட்டம் எவராலும் அணைக்கமுடியாத பெரும் தீயாக முளாசி எரிகின்றது.

எமது தேசியத் தலைவரின் வழிநடத்தலில் கடற்புலிகள் ஆற்றிய சாதனைகள் கால வரலாறாக விளங்கும்.

இந்த மானமறவர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்


முக்கிய குறிப்பு :-

you tube   போன்ற  வலைத்தளத்தில்   தமிழர்கள் பதிவு செய்யும் தமிழீழ விடுதலைப்போர் ஆவணங்கள்    திட்டமிட்டு அகற்றப்படுகிறது    இதை முறியடிக்க எமது வரலாற்றை பாதுகாக்க இந்த காணொளியை ஆவணப்படுத்துமாறு    Home-Tamtube - TamTube   நிறுவனத்திடம்  கேட்டதற்கிணங்க  இந்த காணொளி அவர்களின்  தளத்தில்  ஆவணப்படுத்தப்பட்டுள்ளது 
தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்று ஆவணங்களை சுமந்து எமது அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும்   காணொளித்தளமான   

Home-Tamtube - TamTube நிறுவனத்தினருக்கு நன்றி...