கேரளக் கஞ்சாவைக் கடத்தித்தான் அரசியல் செய்ய வேண்டும் என்ற நிலையில் நாங்கள் இல்லை. நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, போதைப் பொருள் கடத்தல்கள், விற்பனைகள் என்பன எமது பகுதிகளில் இருக்கவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எப்போது ஆளுந்தரப்புடன் இணைந்து அரசியல் நடத்தத் தொடங்கினார்களோ, அன்று முதலே இத்தகைய போதைப் பொருள் கடத்தல்களும், கேரள கஞ்சா கடத்தல்களும், வாள்வெட்டுச் சம்பவங்களும், சமூக அவலங்களும் எமது பகுதிகளில் அதிகரித்துள்ளன. இவ்வாறு ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா நாடாளுமன்றில் நடைபெற்ற ஊழல்கள் மோசடிகள் தொடர்பிலான ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
போதைப் பொருள் கடத்தல், வாள்வெட்டுக்கள் போன்ற சமூக விரோத செயல்களுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கும் ஈ.பி.டி.பியினரே ஒட்டுக்குழுவாக இருந்து கொண்டு காலம் காலமாக தமிழ்மக்களை காணாமல் போக செய்ததுடன் கொன்று குவித்திருந்தார்கள் தவிரவும் கப்பம் பெறுதல் போதைக்கு மக்களை அடிமையாக்குதல் என சொல்லில் அடங்காத மாபெரும் குற்றச் செயல்களை செய்திருந்ததை உலகமே அறியும்