மலசல கூடத்திற்குள் மயங்கி விழுந்து முதியவர் உயிரிழப்பு

breaking
சகோதரியின் வீட்டுக்கு வந்த முதியவர் இயற்கைக் கடன் கழிக்கச் சென்ற வேளையில் மலகூடத்துக்குள் மயங்கி வீழந்துள்ளார். அவர் அவசர நோயாளர் காவு வண்டியில் சாவகச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும், அவர் ஏற்கனவே சாவடைந்துள்ளார் என பரிசோதனை செய்த மருத்துவரால் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் மீசாலை மேற்கு பங்களா சாலையில் இடம்பெற்றத. கச்சாயைச் சேர்ந்த முதியவர், மீசாலை மேற்கில் உள்ள சகோதரியின் வீட்டடுக்கு வந்து மதிய உணவருந்தி விட்டு இயற்கைக் கடன் கழிக்கச் சென்ற வேளையில் இந்தத் துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவரது இறப்புத் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தனர். அறிக்கையைப் பார்வையிட்ட நீதிவான் பிரதேச இறப்பு விசாரணை அதிகாரி திருமதி சி.தவமலர் மூலம் விசாரணைகளை நடாத்தி நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். சாவகச்சேரி மருத்துவமனையில் இறப்பு விசாரணைகளை மேற்கொண்ட திடீர் இறப்பு விசாரணை அதிகாரி மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி மூலம் உடற்கூற்றுப் பரிசோதனை நடாத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.