யாழ்.பல்கலையில் வைத்து ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

breaking
யாழ்ப்பாணத்தில் இன்று நண்பகல் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஊடகவியலாளரும், பல்கலைக்கழக மாணவனுமான ப.சுஜீவன் என்பவர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக நான்காம் வருட மாணவர்களினாலேயே அவர் மூர்க்கத்தனமான சரமாரியான  தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளானவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவனை நேற்று  பல்கலைக்கழக வளாகத்திற்குள் வெளியில் வைத்து பின்தொடர்ந்த பல்கலைக்கழ நான்காம் வருட மாணவர்கள் அவரை மோட்டார் சைக்கிலில் ஏற்றிச் செல்ல முற்பட்டிருந்தனர். இருப்பினுடம் வீதியில் பொது மக்களின் போக்குவரத்து அதிகமாக இருந்த காரணத்தினால் அம்மாணவனை நான்காம் வருட மாணவர்களால் கூட்டிச் செல்ல முடியவில்லை. இந்நிலையில் இன்று வியாழக்கிழமை பல்கலைக்கழக வாளாகத்திற்குள் குறித்த மாணவனை சூழ்ந்த நான்காம் வருட மாணவர்கள் அவர் மீது சரமாரி தாக்குதலை நடத்தியுள்ளனர். இச் சம்பவத்தில் தலைப் பகுதியில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்