வடக்கு ஆளுநரை சந்தித்த நோர்வே தூதுவர்!

breaking
நாட்டிற்கு வருகைதந்துள்ள இலங்கைக்கான நோர்வே தூதுவர்  Thorbjorn Gaustadsaether இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்துள்ளார். இதன்படி இன்று வியாழக்கிழமை காலை யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக உள்ள பழைய பூங்கா வாளாகத்திற்குள் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு சென்று ஆளுநர் சுரேன் ராகவனை சந்தித்து வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.