2 ஆயிரம் பெறுமதியான பொருட்களை திருடியவருக்கு 500 ரூபா அபராதம்

breaking
  வர்த்­தக நிலை­யத்­தில் பொருள்­கள் திரு­டி­ய­வ­ரைக் கடு­மை­யாக எச்­ச­ரித்த யாழ்ப்­பாண நீதி­வான் மன்று அவ­ருக்கு 500 ரூபா தண்­டம் விதித்து விடு­வித்­தது. யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள வர்த்­தக நிலை­யம் ஒன்­றில் 2 ஆயி­ரம் ரூபா பெறு­ம­தி­யான பொருள்­க­ளைத் திரு­டி­னார் என்ற குற்­றச் சாட்­டில் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தார். அவற்­றைத் திரு­டி­யமை, உட­மை­யில் வைத்­தி­ருந்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்­களை நீதி­மன்­றில் அவர் ஏற்­றுக்­கொண்­டார். அத­னை­ய­டுத்து அவ­ருக்கு 500 ரூபா தண்­டம் விதித்த நீதி­வான் ஏ.எஸ்.பி.போல், இனி­வ­ரும் காலங்­க­ளில் இவ்­வா­றான செயல்­க­ளில் ஈடு­ப­டக் கூடாது, அவ்­வாறு ஈடு­பட்­டால் விளக்­க­ம­றி­ய­ லில் வைக்­கப்­ப­டு­வீர் என்று எச்­ச­ரித்­தார்.