வடதமிழீழம், யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட எழுதுமட்டுவாழ் கரம்பகம் – காயன்கடவை வீதி, எழுது மட்டுவாழ் வடக்கு -மருதங்குளம் வீதி, ஒல்லாந்தர் வீதி – கொவ்வைக்கட்டி வீதி, எழுதுமட்டுவாழ் தெற்கு பனிக்கையடி வீதி – வேதக்கால் மயான வீதி ஆகியவை மிகமோசமாகச் சேதமடைந்துள்ளன.
அவற்றைச் சீரமைத்து தார் வீதியாக மாற்றித் தர வேண்டும் என்று சாவகச்சேரி பிரதேச சபையின் வட்டார உறுப்பினர் இ.தெய்வேந்திரம்பிள்ளை சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளரிடம் கோரியுள்ளார்.
இந்த வீதிகளை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர்.
இவை மணல் வீதியாகவும் குன்றும் குழியுமாக வும் காணப்படுகின்றன. அந்த வீதிகளைச் சீரமைத்துத் தர வேண்டும். அதைவிட இந்த வீதிகளில் வீதி விளக்குகளும் பொறுத்தப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான வீதிகள் சீரமைக்கப்படவேண்டியுள்ளன. அவை நிதி கிடைக்கும்போது சீரமைக்கப்படும் என்று பிரதேச சபையினர் தெரிவித்தனர்.