போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு கிடைக்கும் உயர் பாதுகாப்பு நிறுத்தப்பட ​வேண்டும்!

breaking
இலங்கையில்  தற்போது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் தலைதூக்கியுள்ள போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்று   இலங்கை மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். இதன்போது, அரசியல்வாதிகளிடம் இருந்து போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தநிலையில், போதைப்பொருள் செயற்பாடுகளுக்கு இலங்கை ஒரு மூலஸ்தானமாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று (வௌ்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே மேல் மாகாண ஆளுநர் இந்த கருத்துக்களை வௌியிட்டார்.