ஆற்றுக்குள் பாய்ந்த முச்சக்கரவண்டி

breaking
  தென்தமிழீழம், மட்டக்களப்பு நகரில் உள்ள புதுப்பாலம் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று வீதியை விட்டு ஆற்றுக்குள் பாய்ந்து விபத்திற்குள்ளானது. எனினும், அப்பகுதியில் நின்றவர்கள் விரைவாக செயற்பட்டதன் காரணமாக, முச்சக்கரவண்டியிலிருந்து மூவரும் உடனடியாக காப்பாற்றப்பட்டனர். நேற்று (8) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் உறவினர் ஒருவரை பார்க்க சென்ற இரண்டு பெண்களே, விபத்திற்குள்ளாகினர். வீதியை விட்டு விலகிய முச்சக்கரவண்டி, ஆற்றுக்குள் பாய்ந்தது. சாரதியும், இரண்டு பெண்களும் தத்தளித்த நிலையில், அங்கு நின்றவர்களால் மூவரும் காப்பாற்றப்பட்டனர். பெண்கள் இருவரும் மூச்சுத்திணறலிற்குள்ளாகியிருந்தனர். உடனடியாக அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். புதுப்பாலத்தின் இரு பகுதியும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால், இங்கு அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.