வாழைச்சேனையில் வெட்டப்பட்ட மரக்குற்றிகள் மீட்பு!

breaking
  சட்ட விரோதமான முறையில் வெட்டப்பட்ட மரக்குற்றிகள் இன்று வாழைச்சேனை காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குடும்பிமலை காட்டுப்பகுதியில் வியாபாரத்திற்கு கொண்டு செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் மரக்குற்றிகளை கைப்பற்றப்பட்டுள்ளன. சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான எட்டு அடி தொடக்கம் பத்து அடிகளைக் கொண்ட 24 பாலை மரக்குற்றிகளை கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்