காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான செயல் குழு மாநாடு!

breaking
இந்த மாநாடு பொஸ்னியா மற்றும் ஹர்சகோவினாயா ஆகிய நாடுகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த மாநாட்டில் இலங்கை உட்பட 37 நாடுகளில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட 760 முறைப்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது, சுயாதீனமாக இயங்கும் மனித உரிமை வல்லுனர்களை கொண்ட ஐந்து பேரை கொண்ட குழுவினர் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து உரையாடவுள்ளனர்.
 
இது தவிர, பல நாடுகளை சேர்ந்த அரச அதிகாரிகள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் ஏனைய மனித ஆர்வல உறுப்பினர்களும் கலந்து கொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சரஜீவோவில் நடைபெறும் அமர்வின் போது, காணமல் ஆக்கப்பட்ட நாடுகளுக்கான ஐக்கிய நாட்டு அதிகாரிகளின் விஜயம், இனம் காணப்பட்ட முறைப்பாடுகளை அமுல் படுத்துவதில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.