பாதுகாப்பு அளிக்கப்படுமானால் ஈ.பி.ஆர்.எல்.எவ் படுகொலைகளை அம்பலப்படுத்துவன்!

breaking

எனக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படுமானால் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணத்தால் நானும் றிபாயாவும் கடத்தப்பட்டமை, றிபாயா காணாமல் போகச் செய்யப்பட்டமை பற்றி நீதிமன்றில் சாட்சியமளிக்கத் தயாராகவுள்ளேன்' இவ்வாறு தெரிவித்துள்ளார் மட்டக்களப்பு அரசடியைச் சேர்ந்த செல்வி சுகுணா.

காத்தான்குடியைச் சேர்ந்த றிபாயா தனது தோழி சுகுணாவுடன் சேர்ந்து துவிச்சக்கரவண்டி ஒன்றை வாங்க 1988 இல் மட்டக்களப்பு நகருக்கு சென்றார்.

அச்சமயம் இரா. துரைரெட்ணத்தால் இவர்கள் இருவரும் விசாரணைக்கென கூட்டிச் செல்லப்பட்டனர். தமது வாகனத்தில் வருமாறு இரா. துரைரெட்ணம் பணித்தபோதும் நாங்கள் சைக்கிளில் வருகிறோம் என சுகுணாவும் நிபாயாவும் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ். பணிமணைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது தொலைத்தொடர்புக் கருவியொன்றில் 'சுதந்திரப் பறவையைக் கொண்டுவந்துள்ளோம்' என ஒருவர் வேறொருவருக்குகத் தகவல் சொல்வதை இருவரும் கேட்டுள்ளனர். அங்கு நடந்த மிகக் கொடூரமான சித்திரவதைகளின்போது சுகுணா மயங்கி விட்டார். றிபாயாவை நன்கு தெரிந்த சைக்கிள் கடைக்காரர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு பிரஜைகள் குழுத் தலைவர் வண.பிதா சந்திரா பெர்னாண்டோ இவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

அது இந்திய இராணுவ காலமாகையால் அவர்கள் அறிவித்த ஊரடங்கு அமுலில் இருந்தது. எனினும் வண.பிதா தொடர்ந்து அழுத்தம் கொடுத்தமையால் குறிப்பிட்ட முகாமுக்கு வண.பிதாவையும் அழைத்துக் கொண்டு சென்றனர். அங்கு மயக்க நிலையில் சுகுணா மட்டும் காணப்பட்டார். றிபாயவைப் பற்றிய தகவல் தெரியவில்லை. 10/10/2017அன்று வட, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் பொன். ராம் ராஜகாரியர் வெளியிட்ட தகவல் ஒன்றின் மூலமே பாலியல் வன்புணர்வின் பின்னர் றிபாயா கொன்று புதைக்கப்பபட்டார் என்பதை அறிய முடிந்தது. 'வந்த பெருநிதியை முக்கியமானவர்கள் தமக்கும் தம் உறவுகளுக்கும் முடக்கியபின் எஞ்சியதை ஏனையவர்க்குப் பகிர்கையில் பலதும் நடந்தது. காத்தான்குடி பெண்ணை இச்சைக்காக சுகித்துப் புலி என மண்ணுள் புதைத்து மாகாண சபைக்கு வந்தவன்"  என முகநூலில் குறிப்பிட்டிருந்தார் ராம். 'பிறின்ஸ் காசிநாதர் அவர்கள் வாழும்போதே நினைவு மீட்கும் என் பதிவு" என்ற தலைப்பில் இது வெளியாகியிருந்தது. (– ராம் – ([email protected])

றிபாயா - சுகுணா கைது செய்யப்பட்டமைப பற்றி இந்தியப் படையினரிடம் முறைப்பாடு செய்த வண.பிதா சந்திரா பெர்னாண்டோ 06 ஜூன் 1988 அன்று ஈ.பி.ஆர்.எல்.எவ்வினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள மாதா தேவாலயத்தினுள் வைத்தே இவரைக் கொன்றனர். 1990 ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியதும் இராணுவ துணைப் படையாக விளங்கிய ராஸிக் குழுவில் அங்கம் வகித்த இரா. துரைரெட்ணம் மட்டக்களப்பு மண்ணில் மீண்டும் கால் பதித்தார். இதனால் சுகுணா மட்டக்களப்பு நகரை விட்டு வெளியேற நேர்ந்தது. தற்போது புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் இவர் தனக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுமானால் றிபாயாவுக்கு நிகழ்ந்த அவலம் குறித்து நீதிமன்றில் சாட்சியமளிக்கத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொடூரங்களுக்குக் காரணமான இரா. துரைரெட்ணம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் மாநாட்டில் முன்வரிசையில் அமர்ந்திருந்தார். இம்மாநாட்டில் வரலாற்றுக் குறிப்பேடு என்று ஒரு சிறுநூலை வெளியிட்டனர். இதில் புலிகள் தம் மீது தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டுள்ளனர். எனினும் யாழ்ப்பாணத்தில் புலிகளின் முகாமுக்குப் பாதுகாப்பாக நின்ற சுரேன் (திருச்சிற்றம்பலம் சுரேந்திரன் - நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம்) என்ற போராளியைச் சுட்டுக் கொன்றதில் ஆரம்பித்த படுகொலைகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஈரோஸ் இயக்கத்தவரைக் கொன்றதைக்கூட மறந்து விட்டனர்.

'திம்பு பேச்சுக் காலகட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் மத்திய குழு உறுப்பினரும் அதன் செயலாளர் நாயகமும் புரட்சி இராணுவக் கமிசன் தலைவருமான தோழர் க.பத்மாநாபா என்று சில இராணுவப் பதக்கங்கள் சூட்டிய படத்துடன் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது. 'பேச்சுவார்த்தையும் போர் நிறுத்தமும்' என்ற தலைப்பிலான அந்தப் புத்தகத்தின் 18 ஆம் பக்கத்தில் இந்தியா தனது நலனில் இருந்து எமது போராட்டத்தை அணுகுகிறது எனச் சிலர் எல்லாம் தெரிந்தது மாதிரி சொல்கின்றனர். அப்படியே தனது நலனிலிருந்து இந்தியா இப்போராட்டத்தை அணுகுகிறது என்று வைத்துக் கொள்வோம் அதில் என்ன தவறு?' எனக் கேட்டிருந்தார். தோழர் பத்மநாபா இவ்வாறு ஒரு நூலை வெளியிட்டமை பற்றி இந்த வரலாற்றுக் குறிப்பேட்டில் குறிப்பிடப்படவில்லை. அதற்கு நிச்சயம் மறதி காரணமாக இருந்திருக்க முடியாது.

இன்று முன்னாள் எம்.பி. பசீர் சேகுதாவூத் றிபாயா குடும்பத்தவரைச் சந்தித்துள்ளார். இது குறித்து தனது முகநூலில் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். பசீர் சேகுதாவூத் முயற்சியெடுத்து றிபாயாவின் பெற்றோர் மூலம் இநதக் கொலை பற்றி விசாரிக்கப்படுமானால் தான் சாட்சியமளிக்கத் தயார் என சுகுணா தெரிவித்துள்ளார். சூளைமேடு படுகொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வீடியோ கொன்பிரன்ஸ் மூலம் சாட்சியமளித்துள்ளார். அதன் மூலம் நீதிமன்று வீடியோ கொன்பிரன்ஸ் சாட்சியத்தை ஏற்றுக் கொள்கிறது என்பது தெளிவாகிறது. றிபாயா குடும்பத்தினரும் பசீர் சேகுதாவூத்தும் இணைந்து முயற்சித்தால் இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படக்கூடும். (சுகுணா புலம்பெயர் நாடொன்றில் வசிக்கிறார்)

றிபாயா மட்டுமல்லாது வண.பிதா சந்திர பெர்னாண்டோ, இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவர் வனசிங்கா (31.03.1989), அதிபர் கனகரத்தினம் (13,05,1988) அதிபர் கணபதிப்பிள்ளை (ஆரையம்பதி), கிராம சேவை அலுவலர் தேவிசுதன் (கொம்மாந்துறை) ஆகியோர் ஈ.பி.ஆர்.எல்.எவ்வினரால் சுட்டுக்கொல்லப்பட்டமை பற்றி எந்த விசாரணையும் நடந்ததாகத் தெரியவில்லை. களுதாவளையில் முத்துலிங்கம் என்பவரைக் கொன்றுவிட்டு அவரது சடலைத்தை வாகனத்தில் கட்டியிழுத்தனர்.

இதேபோல ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடவைகள் மேடையேற்றப்பட்ட 'தம்பி கொழும்பில்' நாடகத்தின் இயக்குநரும் பிரபல நடிகரும் சிரித்திரன் முதலான பத்திரிகைகளில் நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதியவருமான குமார், தனபால் முதலானோர் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டமை பற்றிய விவரங்கள் அடங்கிய பட்டியில் மிக நீண்டது. இதில் அசோகா ஹோட்டல் படுகொலைகளும் குறிப்பிடத்தக்கவை. யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சமயம் ஈ.பி.ஆர்.எல்.எவ்வினரால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கண்ணன் (குலசேகரம் நாகேந்திரன் - கணேசபுரம், கிளிநொச்சி), ராசா (சிறாம்பியடி, யாழ்ப்பாணம்) முரசொலி பத்திரிகை ஆசிரியர் திருச்சிற்றம்பலத்தின் ஒரே மகன் அகிலன், பொருளியல் ஆசிரியர் கிருஸ்ணா ஆகியோரின் படுகொலைகளும் யாழ். கல்வி சமூகத்தை அதிர வைத்தது.

இவையனைத்தையும் 'வரலாற்றுக் குறிப்பேடு' என புகைப்படங்களுடன் விபரமாக வெளியிட்டால் முன்னாள் முதலமைச்சர் அதனைக் கையில் வைத்திருக்க முடியாது தடுமாறி  விழுந்து விடுவார். அரசியலுக்குப் புதியவரான முன்னாள் முதல்வர் சுரேஸ் பிறேமச்சந்திரனின் சூழ்ச்சிக்குப் பலியாகிவிட்டமை ஏமாற்றமளிக்கிறது. ஒரு கட்சியின் மாநாடு என்று அழைக்கப்பட்டால் அதற்குரிய அளவில் மட்டுமே அவரது பங்குபற்றுதல் இருந்திருக்க வேண்டும். தமக்கு வெள்ளையடிக்க முன்னாள் முதல்வரை பகடைக் காயாக்கியது சரியான செயலன்று.

றிபாயா - சுகுணா சித்திரவதைக்குள்ளான வாவிக்கரை முகாம் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பணியகமாக மாறியது. மீண்டும் ஈ.பி.ஆர்.எல்.எவ். பணிமனையாக இப்போது காட்சியளிக்கிறது. இந்த

முகாமில்தான் கடந்த வருடம் மே தின நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சி செயலர் கி.துரைராஜசிங்கம் கலந்து கொண்டார். மே நாள் தொழிலாளருக்கானது அதில் கட்சி பேதமின்றி கலந்து கொள்வது தவறல்ல எனினும் இந்த இடத்தில் நிகழ்ந்த பாலியல் வல்லுறவு, சித்திரவதைகள், படுகொலைகள் என்பவற்றை நினைத்திருந்தால் இந்நிகழ்வை வேறு இடத்தில் நடத்துமாறு கட்சிச் செயலர் கோரியிருக்கலாம்.

ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் இரத்தவெறிக்கு மட்டக்களப்பில் அழிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் விவரம்:

வீரவேங்கை :நரேஸ்(ஏபிராகாம்லிங்கன், விஜயசுதன், பாஷையூர், யாழ்ப்பாணம்.) 24.12.1986

வீரவேங்கை லத்தீப் முகமது (அலியார் முகமது லத்தீப் ஒல்லிக்குளம், காத்தான்குடி, மட்டக்களப்பு)24.12.1986

மேஜர் பிரான்சிஸ் (இராசையா சடாட்சரபவன், கோட்டைக்கல்லாறு) 31.10.1988

லெப்.அனிதா (சித்திராதேவி தம்பிராசா, ஆரையம்பதி, மட்டக்களப்பு) 28.01.1988

வீரவேங்கை பாண்டியன் (அருள் டேவிட், தாழங்குடா) 20.02.1988

வீரவேங்கை றிஸ்வான் (மாமாங்கம் தெட்சணாமூர்த்தி, திருப்பழுகாமம்) 17.03.1988

வீரவேங்கை யூலி யூலியன் (புத்தூர்) 20.03.1988.

லெப். அரசன் இராம்குமார் (தாமரைக்கேணி)25.03.1988

வீரவேங்கை ஈஸ்வரன் (தம்பிராசா ஆழ்வார்போடி, புதுக்குடியிருப்பு) 13.04.1988

வீரவேங்கை மகேஸ்(பாலகிருஸ்ணன் மகேஸ்வரன், கோட்டைக்கல்லாறு) 02.06.1988

வீரவேங்கை உதயன் (ச.இன்பராஜ் மாமாங்கம், மட்டக்களப்பு) 24.06.1988

வீரவேங்கை குரு (சித்திரவேல் சத்தியநாதன் 37 ஆம் கிராமம்) 28.06.1988

வீரவேங்கை நோபேட் (நல்லையா சிறீபாலன் ஆரையம்பதி) 03.07.1988

வீரவேங்கை காளி (ஞானசேகரம் சின்னத்தம்பி பழுகாமம்) 06.07.1988

வீரவேங்கை குருசாமி (கா.இரத்தினசிங்கம் களுதாவளை) 14.08.1988

வீரவேங்கை வினோபா (க.ஜெகதீஸ்வரன் களுவாஞ்சிக்குடி)14.08.1988

வீரவேங்கை முரளி (பீதாம்பரம் நந்தகுமார் ஆரையம்பதி) 12.1988

2ம் லெப். மேகன் (சீனித்தம்பி தயானந்தன் கல்குடா, வாழைச்சேனை) 22.03.1989

வீரவேங்கை தயாளன் (கணபதிப்பிள்ளை கோபாலரத்தினம் துறைநீலாவணை) 16.07.1989

வீரவேங்கை சீராகரன் (நீலாவணை) 16.07.1989

வீரவேங்கை ஈஸ்வரன் (ஆரையம்பதி, மட்டக்களப்பு) 16.07.1989

வீரவேங்கை நந்தன் (சின்னத்தம்பி நந்தகுமார், 38ஆம் கிராமம்)14.08.1989

வீரவேங்கை கண்ணன் (பெரியபோரதீவு)14.08.1989

வீரவேங்கை மகாராஜன் (வே.தட்சிணாமூர்த்தி )15.08.1989

2ம் லெப். அசோகன் (க.ஜீவராசா 40ம் கிராமம்) 11.09.1989

வீரவேங்கை முகிலன் (இராசமாணிக்கம் ஜீவராசா கோட்டைக்கல்லாறு) 05.11.1989

கப்டன் ஜோன்சன் (சுந்தரலிங்கம் நிசாந்தன் சந்திவெளி) 05.11.1989

கப்டன் காதர் (வைத்தியபிள்ளை கீர்த்திசீலன் கோயில்போரதீவு) 05.11.1989

வீரவேங்கை சங்கர் (வக்கர்) (அந்தோனிப்பிள்ளை ஜெயலிங்கம் மட்டக்கழி) 05.11.1989

வீரவேங்கை நேசன் (தில்லையம்பலம் ராஜூ புல்லுமலை) 05.11.1989

வீரவேங்கை வேணு (குஞ்சித்தம்பி தயாளன் கொம்மாந்துறை) 06.12.1989

வீரவேங்கை கோத்திரன் (சமுத்திரன்)( தவநாயகம் சந்திவெளி) 11.12.1989

வீரவேங்கை பிரசாத் (அமரசிங்கம் பேரின்பராசா எருவில், களுவாஞ்சிக்குடி)19.12.1989

வீரவேங்கை தாமு (அண்ணாச்சி) (சின்னத்தம்பி ரணசிங்கம் ஒல்லிக்குளம்) 23.12.1989