வடதமிழீழம், முள்ளியவளை கணுக்கேணிப் பகுதியில் குழாய்க் கிணற்றுக்காக மக்களின் வாழ்விடத்தில் முகாம் அமைத்து நிலைகொண்டுள்ள படையினரின் நடவடிக்கையால், அந்தப் பகுதியில் மக்கள் வாழமுடியாத நிலையும், டெங்கு பரவும் அபாயமும் காணப்படுவதாக கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.தவராசா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்ததாவது:
பொதுமக்களுக்குச் சொந்தமான காணியில் படையினர் முகாம் அமைத்துள்ளனர். அவர்களது முகாம் அமைந்துள்ள சூழல் டெங்கு பரவும் அளவுக்கு அசுத்தமாக இருக்கின்றது.
அவர்கள் பாவிக்கும் மலசலகூடத்தின் குழி தகரத்தினால் மூடப்பட்டுள்ளது. அதில் ஓட்டைகள் காணப்படுகின்றன. இதிலிருந்து எழுகின்ற துர்நாற்றத்தால் அயல் பகுதிகளில் மக்கள் வாழ முடியாத நிலமை காணப்படுகின்றது – என்றார்.