4 பரல் கோடாவை கைப்பற்றியதோடு 16 வயது சிறுவனை கைது செய்த காவல்துறை

breaking
  வடதமிழீழம், கிளிநொச்சி தர்மரபுரம் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட புளியம் பொக்கனை பகுதியில் நான்கு பரல் கோடா கைப்பற்றப்பட்டுள்ளதோடு, சந்தேகத்தின் பெயரில் 16 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ளான். கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவற்துறைமா அதிபரின் விசேட மாவட்ட போதை ஒழிப்பு பிரிவினரால் நேற்று (10-02-2019) இக் கோடா பரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மாவட்ட விசேட போதைபொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைவாக பிரிவின் பொறுப்பு காவற்துறை அதிகாரி சத்துரங்க தலைமையில் சென்ற ஏழு பேர் அடங்கிய குழுவினரே இதனை கைப்பற்றியுள்ளனர். இதில் நான்கு பரல்கள் கோடாவும். 21 கசிப்பும் காணப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கோடா மற்றும் கைது செய்யப்பட்ட சிறுவனையும் குறித்த பிரிவினர் தர்மபுரம் காவல்துறை நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.