வடதமிழீழம், யாழ்ப்பாணம் மாதகல் நுணசைப் பகுதியில் 11 கிலோ 860 கிராம் கஞ்சா சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட் டுள்ளது.
சிறப்புஅதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, நுணசைப் பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடற்கரைப் பகுதியில் அநாதரவாகக் கிடந்த கஞ்சாப் பொதியை சிறப்பு அதிரடிப் படையினர் மீட்டு இளவாலைப் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.