கஞ்சா செடியை தெரியாமல் பூஞ்செடியாக வளர்த்தாராம்

breaking
  கஞ்சா செடியினை பூஞ்செடி என நினைத்தே அதனை அழிக்காது விட்டேன் என , கஞ்சா வளர்த்தார் என கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் புதிதாக அமைப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற காவல்துறையினர் அங்கு வளர்ந்த கஞ்சா செடியினை மீட்டதுடன் அங்கிருந்த தென்னிலங்கை தெல்தெனியை சேர்ந்த கட்டட தொழிலாளியையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் நேற்றைய தினம் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் காவல்துறையினரால் முற்படுத்தப்பட்டார். அங்கு நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது , கட்டடத்தில் அந்த செடி தானாகவே வளர்ந்தது.அதனை பூஞ்செடி என நினைத்தே அகற்றாது விட்டேன். என தெரிவித்தார். அதனை தொடர்ந்து குறித்த நபரை ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான காசு பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.