மாணவிகளையும் மோட்டார் சைக்கிளையும் மோதித் தள்ளிய முச்சக்கரவண்டி

breaking
தென்தமிழீழம், மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அருகில் முச்சக்கரவண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த விபத்தில் முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி வீதியில் சென்றவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பல்கலைக்கழக மாணவிகள் இருவர் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்தனர். வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகில் நேற்று மாலை 4.30 மணியளவில் பல்கலைக்கழகத்தில் இருந்து தமது விடுதிகளுக்கு இரு மாணவிகள் சென்று கொண்டிருந்தபோது மோட்டார்சைக்கிளும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான நிலையில் முச்சக்கரவண்டி மாணவிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது இதில் நீலாவணை, அக்கரைப்பற்று கண்ணகிபுரத்த்தைச் சேர்ந்த 2 மாணவிகளும் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உட்பட 3 படுகாயமடைந்த நிலையில் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மோட்டார்சைக்கிளை செலுத்தியவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக என காவல்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகனை ஏறாவூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்