சிங்கள இராணுவத்தைக் கொண்டு அடக்க வடக்கு ஆளுநர் சதித்திட்டம்!

breaking
இரணைமடு- யாழ்ப்பாணம் குடிநீர் திட்டத்தை கிளிநொச்சி விவசாயிகளின் எதிர்ப்பினையும் மீறி நடைமுறைப்படுத்துவதற்கு பாரியய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்இ இதற்காக ஆளுநர் கொழும்பில் இரகசிய சந்திப்புக்களை மேற்கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. இந்த தகவல்களின் படி கொழும்பில் நாடாளுமன்றம் அருகில் உள்ள லில்லி அவனீயூவில் ஆளுநரின் கொழும்பு அலுவலகத்தில் இரணைமடு- யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றிருக்கின்றது. இந்த கலந்துரையாடலில் வடமாகாண நீர் வழங்கல் திணைக்கள பணிப்பாளர் வடமாகாண நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருக்கின்றனர் இந்த இரகசிய கூட்டத்தின்போது நீர் வழங்கல் திணைக்கள பணிப்பாளர் பொறியியலாளர் பாரதிதாஸன் இரணைமடு திட்டத்தை நடைமுறைப்படுத்தியே ஆகவேண்டும் என கடுமையாக வாதிட்டுள்ளார் இதன்படி இரணைமடு குளத்தின் மையத்தில் பாரியய கிணறு ஒன்றை அகழ்ந்து அதிலிருந்து நீர் பெற்று யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ளுமாறும் அதனை எவர் தடுத்தாலும் நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் விவசாயிகள் எதிர்த்தால் இராணுவத்தை கொண்டு அதனை அடக்கவேண்டும் எனவும் அவர் ஆலோசனை கூறியுள்ளாராம்.