UNDP நிறுவனம் CFCD ( சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையம்) உடன் இணைந்து வலி. வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளரின் ஆலோசனையின் பிரகாரம் தையிட்டி கிழக்கு, மயிலிட்டி வடக்கு, தென்மயிலை ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளிற்கு அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு மயிலிட்டி துறை வடக்கு பலநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது
இதன்படி 33 விவசாய குடும்பங்களுக்கும் 21 சிறு தொழில் முயற்சியார்களுக்கும் ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான விவசாய மற்றும் சிறிதொழில் முயற்சியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.