வடதமிழீழம் கிளிநொச்சி மாவட்டம் கண்டவாளை பிரதேச செயலர் பிரிவில் உள்ள சுண்டிக்குளம் பிரதேசத்தில் உள்ள பூனைத்தொடுவாய் கடற்பரப்பில் 18.02.1994 அன்று அதிகாலை வேளையில் கட்டுமரம் மற்றும் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது டோராப்படகில் வந்த ஸ்ரீலங்கா கடற்படை துப்பாக்கிச் சூடு நடாத்தியதலில் 10 அப்பாவித் தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் 25வது நினைவுதினம் இன்றாகும்.