தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை.!

breaking
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க, தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. நீதிபதிகள் ரோகிங்டன் பாலி நாரிமன் மற்றும் நவீன் சின்ஹா, ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆலையை திறப்பது தொடர்பான வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தினர்.