கிழக்கு மாகாண ஆளுனராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டதற்கு எதிராக மட்டக்களப்பில் கதவடைப்பு போராட்டங்களை நடத்திய தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க.மோகன், சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் புகைப்படங்கள் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு ஆளுனராக ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் உணர்வாளர் அமைப்பு மட்டக்களப்பில் போராட்டங்களிற்கு அழைப்பு விடுத்திருந்தது. தொடர் கதவடைப்பு போராட்டங்கள் நடந்ததையடுத்து, அந்த அமைப்பின் தலைவர் சி.மோகன் கைது செய்யப்பட்டார். அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், சிறைச்சாலையில் உடல்நலம் குன்றியதால், சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.