தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வதாக இனவாத சிங்கள துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கட்டின் ஊழல் எதிர்ப்பு விசாரணைகளுக்கு ஒத்துழைக்காமையினைத் தொடர்ந்து சனத் ஜெயசூரியவுக்கு இரண்டு வருடங்களுக்கு கிரிக்கட்டுடன் தொடர்புடைய விடையங்களில் செயற்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே சனத் ஜெயசூரிய தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டுள்ளார்.
அதில் விசாரணைகளுக்கென கையடக்கத்தொலைபேசி மற்றும் சிம் அட்டை ஆகியவற்றை சர்வதேச கிரிக்கெட் சம்மேளன அதிகாரிகளுக்கு வழங்காமை குற்றமாகும்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவே தாம் விசாரணை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.