கற்றாளைகளை கழவாக பிடுங்கிச் சென்றவர்கள் மடக்கி பிடிப்பு: யாழ்- தீவகத்தில் சம்பவம்

breaking
  வடதமிழீழம்: யாழ்ப்பாணம் தீவகப் பகுதியில் கற்றாழைகளை அனுமதியின்றி பிடுங்கிச் சென்ற தென்னிலங்கையை சேர்ந்த இரு வியாபாரிகள் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவம் மண்டைதீவு சந்தியில் இன்று மதியம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் உள்ள கற்றாழை தோட்டங்களுக்குள் புகுந்த தென்னிலங்கை வியாபாரிகள் இருவர் அங்கிருந்த பயிர்களை களவாக பிடுங்கி வாகனத்தில் ஏற்றி வந்துள்ளனர். இதனை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் குறித்த வாகனத்தை மறிக்க முற்பட்ட போது தப்பித்துள்ளனர். இதனால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டு மண்டைதீவு சந்தியில் வைத்து இருவரும் மடக்கி காவல்துறையினரால் பிடிக்கப்பட்டனர். கைது செய்யப்படட சந்தேக நபர்களையும் அவர்கள் பயன்படுத்திய வாகனத்தினையும் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.