நள்ளிரவுடன் நீங்குகிறது வைபர் மீதான தடை

breaking

சிறிலங்காவில் வைபர் மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை இன்று நள்ளிரவுடன் நீக்கப்படும் என்று சிறிலங்காவின் அரசாங்க தகவல் திணைக்களம் இன்று மாலை அறிவித்துள்ளது.

கண்டியில் இனவன்முறைகள் வெடித்ததை அடுத்து, கடந்தவாரம் சமூக ஊடகங்களான முகநூல், வட்ஸ் அப், வைபர் உள்ளிட்டவை சிறிலங்கா அரசாங்கத்தினார் தற்காலிகமாக தடை செய்யப்பட்டன.

இந்த நிலையில், இன்று நள்ளிரவில் இருந்து வைபர் மீதான தடை மாத்திரம் நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முகநூல் உள்ளிட்ட ஏனைய சமூக ஊடகங்கள் மீதான தடை அடுத்த சில நாட்களில் நீக்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.