அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும்!

breaking

சீனாவின் ஒரு பாதை ஒரு அணை பொருளாதார முயற்சி, அனைத்துலக சமூகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த இடமளிக்கக் கூடாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

“ஒரு பாதை ஒரு அணை திட்டம் ஏனைய நாடுகளுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்பதில் சீனா தெளிவாக இருக்க வேண்டும்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா தனது இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும் என்ற கவலைகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

எனினும், அவ்வாறு இருதரப்பு உடன்பாட்டை மீறுவதற்கு எமது அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.