சுவிட்ஸர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்கள்.
காலை 6.20 மணியளவில் அவுஸ்திரேலியாவிலிருந்து 15 இலங்கையர்களும், 9 மணியளவில் சுவிட்ஸர்லாந்தில் இருந்து 11 ஈழத் தமிழர்கள் நாடுகடத்தப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
குறித்த அனைவரும் விசேட விமானம் ஒன்றின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.