யாழில் கடலில் குளிக்கசென்றவர் உடலமாக மீட்பு!

breaking
யாழ்ப்­பா­ணம்,  சாட்­டிக் கடற்­க­ரை­யில் குளிக்­கச் சென்ற குடும்­பத் தலை­வர் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்­ளார். ‘கடற்­க­ரை­யில் குளித்­துக் கொண்­டி­ருந்­த­போது அவர் நீரில் இழுத்­துச் செல்­லப்­பட்­டார். அத­னைத் தொடர்ந்து கடற்­ப­டை­யி­ன­ருக்கு அறி­விக்­கப்­பட்டு அவர் மீட்­கப்­பட்­டார். அவ­ருக்கு கடற்­ப­டை­யி­னர் உட­ன­டி­யாக முத­லு­த­வி­களை மேற்­கொண்­ட­னர். உட­ன­டி­யாக நோயா­ளர் காவு­வண்டி மூலம் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு எடுத்து வரப்­பட்­ட­போ­தும் அவர் உயி­ரி­ழந்­து­விட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது’ என்று ஊர்­கா­வற்­று­றைப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.