யாழில் பொலீசாருக்கு காணி வழங்க மக்கள் எதிர்ப்பு!

breaking
யாழ்ப்பாணம் மானிப்­பாய் பொலிஸ் நிலை­யக் கட்­ட­டத் தொகுதி அமைப்­ப­தற்­கான நிலங்­க­ளைச் சுவீ­க­ரிக்­கப் பொலி­ஸார் கடி­தம் அனுப்­பிய நிலை­யில், அவர்­க­ளுக்கு நிலம் வழங்க அவற்­றின் உரி­மை­யா­ளர்­கள் கடும் எதிர்ப்­புத் தெரி­வித்­துள்­ள­னர். எதிர்ப்பை வெளிக்­காட்­டிப் பிர­தேச செய­ல­ருக்­குக் கடி­தம் அனுப்­பி­யுள்­ள­னர். தனி­யா­ருக்­குச் சொந்­த­மான 16 பரப்­பு­டைய 6 காணி­க­ளைச் சுவீ­க­ரிப்­பதற் கான அறி­வித்­தல் காணி உரி­மை­யா­ளர்­க­ளுக்­குப் பிர­தேச செய­ல­கம் ஊடாக அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. மானிப்­பாய் பொலிஸ் நிலை­யத்­தைச் சூழ தமிழ் மக்­க­ளின் நிரந்­தர உறு­திக் காணி­களை நீண்­ட­கா­ல­மா­கக் கைய­கப்­ப­டுத்தி வைத்­துள்ள பொலி­ஸார் அந்­தக் காணி­க­ளைத் தமது பயன்­பாட்­டுக்கு நிரந்­த­ர­மாக கைய­கப்­ப­டுத்­து­வ­தற்கு காணி சுவீ­க­ரிப்­புச் சட்­டத்­தைப் பயன்­ப­டுத்­தும் முத­லா­வது அறி­வித்­த­லையே நில உரி­மை­யா­ளர்­க­ளுக்கு அனுப்பி வைத்­துள்­ள­னர். இவ்­வாறு வழங்­கப்­பட்ட அறி­வித்­த­லின் பிர­கா­ரம் காணி உரி­மை­யா­ளர்­கள் தமது காணி­களை வழங்­கு­வ­தற்கு எந்­த­வி­த­மான இணக்­கமோ அல்­லது வழங்­கு­வ­தற்­குச் சம்­ம­தமோ கிடை­யாது என்று பிர­தேச செய­ல­ருக்கு எழுத்­தில் வழங்­கி­யுள்­ள­னர்.
குறித்த நிலத்தை, அவற்­றின் உரி­மை­யா­ளர்­க­ளின் சம்­ம­தம் இன்றி அடாத்­தாக அப­க­ரித்து வைத்­தி­ருக்­கும் நிலை­யி­லேயே பொலிஸ் நிலை­யம் இயங்­கு­கி­றது.
அந்த நிலத்தை வழங்­கு­மாறு உரி­மை­யா­ளர்­கள் கோரிக்கை விடுத்து வரு­கின்ற நிலை­யில் இவ்­வாறு சுவீ­ க­ரித்­துள்ள நிலங்­க­ளில் பொலிஸ் நிலை­யம் மட்­டு­மன்றி பொலி­ஸா­ரின் அணி­வ­குப்­புக் கூடம், தங்கு விடு­தி­கள் என பல ஆடம்­பர வச­தி­க­ளும் உள்­ள­டக்­கப்­ப­ட­வுள்­ளன என்­றும் நில உரி­மை­யா­ளர்­கள் சுட்­டிக் காட்­டு­கின்­ற­னர்