வீரத்தளபதிக்கு எம் விழிநீர் வீரவணக்கம்
வீரத்தின் இருப்பிடம்,
விடுதலையின் உயிர்மூச்சு,
காலத்தால் அழியாத காவியத் தளபதி கேணல்
கோபித்துக்கு உணர்வின் வணக்கங்கள்.
மல்லாவி மண்பெற்ற மாவீரன் நீ
எல்லைகள் காத்து நின்ற எரிமலை நீ
வல்லைமகன் வழிநடத்த, எம் வாழ்வு வளம் பெற
புல்லர்களை அழித்த புலிவீரன் நீ.
தமிழீழப் விடுதலைப்போருக்குள் நின்று
புயலாக சுழன்றடித்த காலத்தின் பதிவு.
கரிகாலன் வளர்த்தெடுத்த சாதனைத் தளபதி நீ
சமர்க்களங்கள் பல கண்ட போரியல் வல்லுனன்!
வேவுகள் பார்த்து வெற்றிக்கு வழி சமைத்தாய்
சாவரும் களங்கள் எல்லாம்-
சரித்திர களங்களாக்கி
கூவிடும் எறிகணைகள் குண்டு மழை பொழிய
சாகசங்கள் பலபுரிந்து சாள்ஸ் அன்ரனி
சிறப்புப் படையணியின் வெற்றிக்காய் உழைத்த சிறப்பு தளபதி!
நீ வரும் செய்தி கேட்டு
நிலைதடுமாறி சிங்களப் படைகள் பகைகள் ஓடி காட்சி
ஒன்றா இரண்டா
ஓயாத அலைகள் எங்கும்
ஓய்வின்றி,உறக்கமின்றி
ஓய்ந்திடா அலையாக சிங்கள படைகளை விரட்டி நின்றும்
சாகாத வரம் பெற்ற
சாதனையாளன் என்று - அன்று
பேசாத வாய்கள் இல்லை.
தீச்சுவாலை சண்டையில் நீ
தீரமுடன் போர்புரிந்து-பகை
மூச்சடங்கச் தான் செய்து சிங்களத்தின் முப்படைக்கும் பேரிடி கொடுத்தவன் நீ-எம்
முதல்வனால் மதிப்பும் பெற்றாய்!
எத்தனை திறமை கொண்டாய்
எம்மை நீ உறவாய் கண்டாய்
அத்தனையும் எம் ஆழ் மனதில் இன்றும் அசைந்திடாமல் நிற்கிறது
ஆற்றலும்,அறிவும்,நல் ஆளுமையும்..
வேகம் ,வீரம், நட்பை போற்றிடும் குணமும்
வீறுட்டு நின்றதை கண்டும்
புதுமையில் படைநடத்தும் போர்த்திறம்-பலவும் கண்டு
பூரித்து நின்றோம்.
எப்போதும் விடுதலையே எமக்கான தேவையென்றாய்..
சற்றேனும் கொள்கையில் சறுகாமல் திடம் கொண்டாய்..
”இயலாத ஒன்று இருக்காது எமக்கு” என்று..
முடியாதவரை நாம் முன்னேற முடியாதென்று
சளையாது படைநடத்திய சாதனைத் தளபதியே!
நெஞ்சறையில் நீங்கள் நித்தம் அகல்விளக்காய்
இன்றோடு பத்தாண்டு எமை விட்டு நீர்பிரிந்து
இன்றைய நாளில் உங்களுடன் வீரவரலாறான-உம்
சக தோழர்கட்கும் எம் தமிழ் உறவுகட்கும்
நெஞ்சுருகக் கண்ணில் நீர் பெருக-உமை
நினைத்து வீரவணக்கத்தை செலுத்துகிறோம்.
என்றோ ஒருநாள் எமக்கும் விடிவு வரும் அதுவரை
உங்கள் பாதையிலே உறுதியுடன் பயணிப்போம் என உறுதி கொள்கிறோம்.
-தாரகம் இணையத்திற்காக கேணல் கோபித்தின் நண்பர்கள்-