வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தி போராட முடிவு

breaking
  வடதமிழீழம்: முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த போராட்டம் எதிர்வரும் 11ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக சிவில் சமூக அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அவ்வமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பான சிவில் சமூக அமைப்புக்களின் ஊடக சந்திப்பு நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போதே போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாட்டத்தின் வைத்தியர்கள் பணிக்கு ஒழுங்காக சமூகமளிப்பதில்லையென்றும் கடமைகளை சரியாக செய்வதில்லையென்றும் மக்கள் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருவதாக சிவில் சமூக அமைப்பினர் தெரிவித்தனர். இதன் காரணமாகவே போராட்டமொன்றை முன்னெடுக்க தாம் உத்தேசித்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.